இன்று 72வது நாளாக நடக்கும் விவாசாயிகளின் போராட்டம்..!
விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர். மத்திய அரசின் மூலம் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிந்து வருகின்றன. தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
விவசாயிகள் மீதான அடக்குமுறையை நிறுத்தும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ள விவசாயிகள் நாளை நெடுஞ்சாலை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.






