சசிகலா பிப்ரவரி-8 ஆம் தேதி தமிழகம் வருகிறார்..!
பிப்ரவரி 7ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவார் என நேற்று கூறியிருந்த நிலையில் எட்டாம் தேதி வருவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தகவலை டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி தண்டனைக்காலம் முடிந்து வெளியே வந்த சசிகலா கொரொனா தொற்று பாதிப்பு காரணமாக பெங்களூருவில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
அவர் வரும் 7ஆம் தேதி தமிழகம் வருவார் என நேற்று கூறப்பட்டிருந்த நிலையில் வரும் 8ஆம் தேதி தமிழகம் வருகிறார் என டிடிவி தினகரன் தகவலை தெரிவித்து இருக்கிறார்.







