தனிநபர் அந்தரங்கத்தில் தலையிடும் வாட்ஸ் ஆப்..!
வாட்ஸ்அப் தனிநபர் அந்தரங்கத்தில் தலையிடுவதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தேசப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மையில் வாட்சப் தனது விதிகளையும், கொள்கைகளையும் மாற்றி அதற்கு பயனாளர்கள் உடன்படா விட்டால் கணக்கை நீக்கி விடும்படி அறிவித்துள்ளது. இதனால் தங்கள் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படும் என்ற அச்சம் அதன் வாடிக்கையாளர்கள் இடையே எழுந்துள்ளது.
பல லட்சம் பேர் தங்களது வாட்ஸ்அப் கணக்கை நீக்கிவிட்டு இதர செயலிகளுக்கு மாறி கொண்டுள்ளனர்.







