இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு 29 ஆக அதிகரித்துள்ளது..!
இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு 29 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் உருமாறிய கொரொனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து கடந்த நவம்பர் மாதம் இந்தியா திரும்பியவர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.
பிரிட்டனில் இருந்து தாயகம் வந்தவர்களில் ஏற்கனவே 25 பேருக்கு உருமாறிய கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் நான்கு பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரொனா பரவலை கட்டுப்படுத்த பிரிட்டன் உடனான விமான சேவை ஜனவரி 7-ம் தேதி வரைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.






