இயேசுநாதரை சுட்டது கோட்சே – அமைச்சர் சீனிவாசனின் சர்ச்சை பேச்சு..!
இயேசுநாதரை சுட்டது கோட்சே என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அம்மா கிளினிக் துவக்க விழா நடைபெறுகிறது.
இதில் பங்கேற்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதை அதிமுகவினர் விமர்சிப்பது குறித்து பேசினார்.
தற்போது இதுபோன்று நலத்திட்டங்களை திமுகவினர் கொடுத்திருந்தால் அவர்கள் புத்தர்கள் போலவும் நாங்கள் கொடுத்தால் இயேசுநாதரை சுட்ட கோட்சே போலவும் பார்க்கிறார்கள் என்றார். இயேசுநாதர் யாரும் சுடவில்லை காந்தியை தான் கோட்சே சுட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.







