--- --:--:-- --

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

10

மிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதியில் நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு கடற்பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon