13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த யோகா பயிற்சியாளர் கைது..!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் யோகா மாஸ்டரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருமங்கலத்தை சேர்ந்த யோகா மாஸ்டர் என்பவர் அந்த பகுதியில் உள்ள யோகா பயிற்சி மையத்தில் 13 வயது சிறுமி பயிற்சிக்கு சென்ற போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் யோகா மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.






