ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த புறா பறக்கவிடும் போட்டி..!
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ராணுவ வீரர்கள் புறாக்களை பறக்க விடும் போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டனர். ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 20 பேர் பங்கேற்று அமைதி சின்னமாக விளங்கும் புறாவை எல்லையில் பறக்க விட்டனர். முதலில் பறந்த புறா நல்ல ஆரோக்கியமான புறா என்று பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. காஷ்மீரில் ஒரு கிராமிய விளையாட்டு வீரர்களுக்காக நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.






