ஹோட்டலில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை..!
திருவண்ணாமலையில் உணவகத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி இருநூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கீழ்பெண்ணாத்தூர் டாஸ்மாக் கடை அருகே உள்ள உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த ஒரு குருபரனுக்கும் தீனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தீனா கல்லால் தாக்கியதால் குருபரன் தலையில் காயமடைந்து உயிரிழந்தார். தீனாவை போலீசார் கைது செய்தனர்.
இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை எஸ்பி சமாதானப்படுத்தினார்.







