மாணவரும், ஆசிரியரும் இணைந்து கின்னஸ் சாதனை..!
ஆந்திர பிரதேசத்திலுள்ள மார்ஷியல் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் ஆசிரியரும் அவரது மாணவரும் சேர்ந்து ஒரு புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர். அதாவது ஆசிரியர் பிரபாகர் ரெட்டி தரையில் படுத்துக் கொண்டு அவரை சுற்றி 49 தேங்காய்களை வைத்தார். அவரது மாணவவர் கண்களை கட்டிக்கொண்டு ஆசிரியரின் மேல் படாமல் சுத்தியலால் அனைத்து தேங்காயையும் குறிபார்த்து அடித்து நொறுக்கினார்.
இதற்காக கடந்த 46 மாதங்களாக பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் 35 தேங்காய்களை உடைப்பது தங்களின் இலக்காக இருந்தது. ஆனால் 40 தேங்காய்களை வெற்றிகரமாக உடைத்தது மகிழ்ச்சியை என ஆசிரியர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.







