நண்பனை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்..!
சென்னையில் மது போதையில் நண்பனை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சூலைமேட்டை சேர்ந்த அந்தோணி என்பவர் நேற்று இரவு கோடம்பாக்கம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் 5 பேரும் அந்தோணியை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
தனது மகளின் கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தோணியின் தந்தை கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.







