ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்
ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வகுப்புகளுக்கான நேரத்தை தனியார் பள்ளிகள் முறையாக பின்பற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







