ரயில்கள் இனி எப்போது ஓடும்? மத்திய அரசு அளித்துள்ள விளக்கம்..!
பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவையை மறு உத்தரவு வரும்வரை ஓடாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கொரொனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரொனா தாக்கம் தற்போது குறைந்து வருவதால் ரயில் சேவை மீண்டும் துவங்க வாய்ப்பு உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியாகியிருந்தது.
மீண்டும் ரயில் எப்போது ஓடும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் தற்போது இயக்கப்படாது என உறுதிபட தெரிவித்துள்ளது. அதேநேரம் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
மும்பை மாநகரை பொறுத்தவரை மாநில அரசின் கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.







