ஐபிஎல்க்கான பயிற்சியை தொடங்கியுள்ள தோனி…!
நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் இறங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான சர்வதேச பயிற்சி மையத்தில் உள் அரங்கில் தோனி பயிற்சி மேற்கொண்டதாக சங்கத்தின் அலுவலகப் பொறுப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு சக வீரர் ரெய்னா, தோனியின் ஹெலிகாப்டர்கள் விரைவில் புறப்பட உள்ளதாக சூசகமாக கூறியிருந்தார்.







