மேட்டுப்பாளையம் அருகே சாலையோரத்தில் கூலாக உட்கார்ந்திருக்கும் சிறுத்தை
மேட்டுப்பாளையம் அருகே சாலை ஓரத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த சிறுத்தைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையோரம் உள்ள வனப்பகுதியில் காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
இந்த விலங்குகள் சாலையோரம் நடந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் குஞ்சப்பனை அருகே சாலையோரத்தில் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்திருந்தது. இதனை அவ்வழியாக சென்ற இளைஞர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.






