சத்தியமங்கலம் அருகே மரக்கிளையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மலைச்சரிவில் இருக்கும் மரக்கிளையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தையின் உடலை வனத்துறையினர் மீட்டனர். திம்பம் மலைப்பகுதியில் அவ்வப்போது யானைகள் மற்றும் சிறுத்தைகளும் நடமாடுகின்றன.
பண்ணாரி வனப்பகுதியில் மான்கள் அதிகமாக இருப்பதால் அவற்றை வேட்டையாடுவதற்காக சிறுத்தைகள் அடிக்கடி திம்பம் மலைப் பகுதியை கடப்பது வழக்கமாக இருக்கும். இந்த நிலையில் மலைப்பாதையில் 11 வது வளைவில் சாலையை கடந்த சிறுத்தை ஒன்று மலைச்சரிவில் கீழே விழுந்து மரக்கிளையில் சிக்கி உயிரிழந்துள்ளது.





