--- --:--:-- --

அமைச்சர் ஆன பிறகு ஏசி இருந்தால் தான் தூக்கமே வருகிறது – அமைச்சர் பாஸ்கரன் ‘ஓபன் டாக்’

5

அமைச்சர் ஆனதிலிருந்து ஏசி இருந்தால் தான் தூக்கம் வருவதாக அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதிப் புதூரில் தோட்டக்கலை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய அவர் பெண் குழந்தைகள் மட்டுமே சிறப்பான முறையில் படிப்பதாக தெரிவித்தார். ஆண் பிள்ளைகளில் நூற்றுக்கு மூன்று பேர் மட்டுமே படிப்பதாகவும், சிறுவயதிலிருந்தே மாணவர்கள் மது அருந்துவதாக விமர்சனம் செய்தார்.

 

தான் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தபோது சாதாரண கட்டிலில் படுத்து உறங்கியதாக தெரிவித்த அமைச்சர் பாஸ்கரன் தற்போது ஏசி இருந்தால் தான் தூக்கம் வருவதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Right Menu Icon