நாளைக்கு தான் பேசலாம் என்று சொல்கிறார்களே; விஜய் முன் கொந்தளித்த ஆனந்த்
கவனம் ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது. அப்போது சபநாயகர் ஜே.சி.டி பிரபாகர் நாளை பேசிக் கொள்ளலாம் என்று கூறினார். இருந்தாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் ஆனந்த் அண்ணா கொஞ்சம் இருங்கள் நாளைக்கு பேசலாம் என்று சொல்கிறார்களே என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், உண்மையாகவே இந்த அவையில் தினந்தோறும் வரும் போது சந்தோஷமாக இருக்கிறது. முதலமைச்சர் விஜய் தினமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு கொண்டிருக்கிறார். நான் மட்டும் அல்ல இங்கு இருக்கும் எல்லோரும் எக்காரணத்தை கொண்டும் தவறு செய்யமாட்டோம் என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




