பண்ருட்டி அருகே நேர்ந்த சோகம் – நிவாரணம் அறிவித்த விஜய்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பணிக்கன்குப்பம் கிராமம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையவும் அவர் வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





