--- --:--:-- --

கரூருக்கு வருகிறார் முதல்வர் ஜோசப் விஜய் – மக்கள் சந்திப்பு இடத்தை ஆய்வு செய்த ஏ.டி.ஜி.பி

4

மிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் விரைவில் கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், அவர் பங்கேற்கவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தை சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) நேரில் ஆய்வு செய்தார்.

 

 

நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், பொதுமக்கள் அமர்வு மற்றும் நுழைவு–வெளியேற்ற ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களை அதிகாரிகளுடன் இணைந்து அவர் ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகளை வழங்கினார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிர முன்னேற்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon