காவிரி விவகாரத்தில் அதிமுக மேற்கொண்ட முயற்சிகளை பட்டியலிட்ட இபிஎஸ்
மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க பல்வேறு காலகட்டத்தில் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார். 2014 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த 2015, 2016ம் ஆண்டு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கையும் அரசு எடுக்கும் என்று 2016 ஆம் ஆண்டு இந்த சட்டப்பேரவையில் 110 விதியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார் – இபிஎஸ்





