அஜித்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவு
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சஸ்பென்ட் ஆன மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம், திருப்புவனம் ஆய்வாளர் ரமேஸ் குமார், எஸ்.ஐ, சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகிய நால்வருக்கும் முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரித்து வரும் இவ்வழக்கில் விசாரணைக்கு நால்வரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





