ராஜசேகரனுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் சோதனை
திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரனுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவில் சோதனை நடத்தினர்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள அந்த கல்வி நிறுவனத்தில் (இந்திரா கணேசன் கல்லூரி) கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.






