நான் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கல – வதந்தியை மறுத்த பிரகாஷ்ராஜ்
வில்லன் நடிகராக நடிகர் பிரகாஷ் ராஜ் சினிமா, அரசியல் என பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களையும் அவர் X தளத்தில் தொடர்ந்து பேசி வருகிறார்.
அடுத்து அவர் பிரபாஸ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகும் ஸ்பிரிட் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது திடீரென அதில் இருந்து வெளியேறிவிட்டார் என செய்தி பரவியது.
தீபிகா படுகோன் விலகியது போல தற்போது கருத்து வேறுபாட்டால் பிரகாஷ் ராஜும் வெளியேறிவிட்டார் என கூறப்பட்டது.இது பொய் செய்தி என பிரகாஷ் ராஜ் விளக்கம் கொடுத்து இருக்கிறார். என் காட்சிகளை இன்னும் படமாக்கவே தொடங்கவில்லை, அதற்குள் வாட்ஸப் பேக்டரி கதைகளை பரப்புகிறார்கள் என அவர் கூறி இருக்கிறார்.





