--- --:--:-- --

இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

3

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

.

நாளை மற்றும் நாளை மறுநாள் (25,26) தமிழ்நாட்டின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 27 முதல் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு, புதுச்சேரியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும், இயல்பை விட குறைவாகவும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon