இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை – 61 பேர் உயிரிழப்பு
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக நிலச்சரிவு உள்பட பல்வேறு இடர்பாடுகளை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக இலங்கை கொட்டித் தீர்க்கும் மழையால் இதுவரை 600 வீடுகள் சேதமடைந்துள்ளன. மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.






