திமுக அரசில் ஜல்லிக்கட்டு டோக்கன்களிலும் ஊழல்: EPS
2026-ல் ADMK ஆட்சி அமைந்தவுடன், பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என சேந்தமங்கலம் தேர்தல் பரப்புரையில் EPS தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டி டோக்கன்களிலும் ஊழல் செய்த திமுக அரசு அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு புதிய வடிவில் பெயர் சூட்டி வருவதாக சாடினார். மேலும், டாஸ்மாக்கில் ₹1,000 கோடி ஊழலை ED கண்டுபிடித்துள்ளதாகவும் விரைவில் பலர் கைதாக உள்ளனர் என ஆருடம் தெரிவித்தார்.






