ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்றுக: கீ.வீரமணி
ஆணவக் கொலைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் திராவிட கழகக் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
சனாதனத்தின் கோர முகமான சாதியின் கொடிய விளைவுகளில் ஒரு துளிதான் ஆணவக் கொலை என தெரிவித்த அவர் இளைஞர்களிடம் சாதி ஒழிப்பு விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்துக்கு அவர் இரங்கலும் தெரிவித்துள்ளார்.





