--- --:--:-- --

10 வயது சிறுவனை கௌரவித்த இந்திய ராணுவம்

10

பரேஷன் சிந்தூரின்போது பஞ்சாப் எல்லையோர கிராமமான டாரா வாலியில் ஒருவர் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தார். தங்களது விவசாய நிலத்தில் முகாமிட்டிருந்த ராணுவத்தினருக்காக தண்ணீர், பால், லஸ்ஸி, ஐஸ்கிரீம் ஆகியவற்றை வழங்கினார் அந்த ஷ்ரவன் சிங் என்ற 10 வயது சிறுவன்.

 

இந்நிலையில், அவரது செயலைப் பாராட்டி பரிசுகள் வழங்கி கௌரவித்தது இந்திய ராணுவம். பெரியவனானதும் ராணுவ வீரராக வேண்டும் என்பதே ஷ்ரவனின் ஆசையாம்.

Right Menu Icon