பேருந்தில் இடமிருந்தும் உள்ளே செல்லாமல் படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள்..!
செங்கல்பட்டில் அரசு பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் செய்ததால் பேருந்தை ஓட்டுநர் பாதி வழியிலேயே நிறுத்தினார்.
பேருந்தில் இடம் இருந்தாலும் மாணவர்கள் உள்ளே செல்லாமல் ஜன்னலை பிடித்து தொங்கிய படியும் படிக்கட்டில் நின்று கொண்டும் கால்களை சாலையில் தேய்த்த படி வருவதாக பேருந்து ஓட்டுனர் குற்றம் சாட்டினார்.






