பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்..!
திருவள்ளூர் அருகே பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது.
திருப்பதி சட்ட கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் வள்ளுவர் புரத்தைச் சேர்ந்த சந்தோஷ் கல்லூரி மாணவி பூவிழி ஆகியோர் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தனர்.
பூவிழிக்கு அவரது பெற்றோர் வேறொரு திருமண ஏற்பாடு செய்ததால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருவள்ளூரில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு எஸ் பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டாரையும் அழைத்து சமரசம் செய்த போலீசார் சந்தோஷின் வீட்டிற்கு இருவரையும் அனுப்பி வைத்தனர்.





