பள்ளிகள் திறப்பு எப்பொழுது..? முக்கிய அறிவிப்பு..!
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.
இதில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரர் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் புதிய மாணவர் சேர்க்கை பள்ளி திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் தற்பொழுது கடுமையான வெயில் நிலவிவரும் நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.





