வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருட்டு..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம் நகர் பகுதியில் வசிக்கும் நபர் தனது வீட்டின் முன்பு காரை நிறுத்து உள்ளார்.
வெவ்வேறு முகமுடி மற்றும் கயிறு அணிந்து வந்தவர்கள் காரை திருடி சென்றனர். இதில் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.





