நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
தென்காசி மாவட்டத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நாளை முதல் அரையாண்டு தேர்வு கால அட்டவணைப்படி நடைபெறும் என தென்காசி சிஇஓ முத்தையா தெரிவித்துள்ளார்.





