திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தொடங்குகிறது நவராத்திரி பிரம்மோற்சவம்!
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று முதல் 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரம்மோற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியான அங்குரார்ப்பணம் நேற்று மாலை திருப்பதி மலையில் நடைபெற்றது.
அங்குரார்ப்பணத்தை முன்னிட்டு ஏழுமலையானின் சேனை முதல்வன், கோயிலில் இருந்து புறப்பட்டு மேற்கு மாட வீதியில் உள்ள வசந்த மண்டபத்தை அடைந்தார். அங்கு புற்றுமண் சேகரிக்கப்பட்ட நிலையில் சேனை முதல்வனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து புற்றுமண் கலசங்கள் மாடவீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தன.
கோவிலில் உள்ள மண்டபத்தில் புற்று மண்ணை கொட்டி அதில் பூமாதேவி படத்தை கோவில் அர்சகர்கள் வரைந்தன . தொடர்ந்து பூமாதேவி படத்தின் வயிற்று பாகத்தில் இருந்து மண்ணை எடுத்து புதிய மண் கலசங்களில் போட்டு அவற்றில் நவதானியங்கள் தூவப்பட்டன.





