கோவிலுக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு..!
கரூர் அருகே 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன திருமணமான பெண் கிணற்றில் சடலமாக கிடக்கும் நிலையில் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை எடுக்க விடாமல் தீயணைப்பு வாகனத்தை சிறைபிடித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை பணி முடிந்து வீடு திரும்பும் பொழுது அவர் கோவிலுக்கு சென்றுள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொபைல் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கோயிலில் இருந்து வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் உறவினர்கள் தேடியும் கிடைக்காததால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண் உடல் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.





