சோசியல் மீடியா யூடியூபர்களுக்கு உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..!
அவதூறு மற்றும் தவறான கருத்துக்களை பதிவிடும் சமூக வலைதளங்களை கண்காணித்து தடுக்க மாவட்ட எஸ்.பி அலுவலகங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் சமூக வலைதளங்களை தடுக்க கோரி வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் எஸ்.பி.க்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களின் அலுவலகங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவலை வெளியிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





