ஒரே பைக்கில் ஏழு இளைஞர்கள் பயணம்..!
உத்திரபிரதேச மாநிலம் கபூரில் கூட்டமாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரே பைக்கில் அமர்ந்து சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.
அதில் ஏழு சிறுவர்களும் இளைஞர்களும் ஒருவரை மற்றொருவர் தொற்றிக்கொண்டு பயணம் செய்துள்ளனர். ஆபத்தை உணராமல் அவர்கள் செய்த செயலின் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.






