500 ரூபாய் கொடுத்தால் தான் மாற்று சான்றிதழ் என சொல்லும் ஆசிரியர், தலைமை ஆசிரியர்..!
திருச்சி மாவட்டத்தில் கோயில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாற்று சான்றிதழ் வழங்குவதற்காக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தலா 500 ரூபாய் பணம் பெறுகின்றனர்.
இதை மாணவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். 500 ரூபாய் கொடுக்க மறுத்ததால் நான்கு பேரையும் ஒரு மண்ணாங்கட்டியும் நீ படிக்க வேண்டாம் என தலைமை ஆசிரியர் திட்டினார்.
அப்போது மாணவர்கள் பணம் இல்லை என பாவமாக கூறுகின்றனர். ஆசிரியர் சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பது தான் விளங்கவில்லை.






