மகனை காப்பாற்ற முயன்ற மாற்றுத்திறனாளி தந்தைக்கு நேர்ந்த துயரம்..!
திண்டுக்கல்லில் தவறி விழுந்த மகனை காப்பாற்ற முயன்ற மாற்றுத்திறனாளி தந்தை விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தார். மலை குட்டி அடிவாரத்தில் உள்ள கோட்டி குப்பம் தொட்டி விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தொட்டிகள் குப்பைகள் சேர்ந்து அகற்றப்படாத நிலையில் உள்ளன. இந்த நிலையில் வெற்றிவேல் தனது மகனுடன் கோட்டை குளத்தில் குளிக்க சென்ற பொழுது சிறுவன் தவறி தொட்டிக்குள் விழுந்துள்ளான்.
மகனை காப்பாற்ற மாற்றுத்திறனாளி ஆன அவரது தந்தை வெற்றிவேலும் தொட்டியில் இறங்கியுள்ளார். அப்பொழுது விஷவாயு தாக்கியுள்ளது. தகவலின் பெயரில் வந்த தீயணைப்பு துறையினரையும் விஷவாயு தாக்கியது. இதில் வெற்றி வேல் உயிரிழந்தார்.





