விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்த காரில் 5 பேர் உடல் கருகி பலி..!
சத்தீஷ்கர் அருகே விபத்துக்குள்ளான கார் பற்றி எரிந்ததில் அதில் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ராஜ்கமல் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்தது.
அதிலிருந்து மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.






