அரசு ஊழியர்களுக்கு 30 சதவீதம் ஊதியம் உயர்வு..!
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 30% ஊதியம் உயர்வை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள். சட்டப்பேரவையில் இது தொடர்பான அறிக்கையை வாசித்த முதலமைச்சர் சந்திரசேகரராவ் இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக தெரிவித்தார்.
ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றுவது உட்பட அனைவரும் பயன்பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.






