3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்..!
திருச்சி விமான நிலையத்தில் மூன்று கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சியில் விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து வந்த பயணிகள் விமானத்தில் சந்தேகத்திற்கிடமான மூன்று பேரிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் உடலில் மறைத்து வைத்திருந்த மூன்று கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





