--- --:--:-- --

பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை

6

மிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் தீர்ப்பை திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 

2015ஆம் ஆண்டு விக்கிரவாண்டி பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சொத்துகளை சேதப்படுத்தியதாக பாண்டியன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீண்டகால நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.

 

அந்த வழக்கில் குற்றம் நிரூபணமானதைத் தொடர்ந்து, சம்பவத்தின் தீவிரத்தையும் பொதுச் சொத்து பாதுகாப்பை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டதையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon