துருக்கி ட்ரோன்களை வைத்து பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா

துருக்கி ட்ரோன்களை வைத்து பாக்., தாக்குதல் நடத்தியதாக பெண் ராணுவ அதிகாரி சோபியா குரேஷி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் 36 இடங்களுக்குள் ஊடுருவும் திட்டத்துடன் 300-400 ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியதாக கூறினார்.

 

அவற்றில் பெரும்பாலானவற்றை நடுவானில் அழித்து விட்டதாக கூறிய அவர், தடயவியல் பரிசோதனையில் அவை துருக்கி தயாரிப்பு என தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டார்.