தென் கைலாயம் எனப்போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நமச்சிவாய கோஷங்கள் விண்ணதிர பொதுமக்கள் வடம்பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 1-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்பாளும், தாயுமானவர் (சிவபெருமானும்) காமதேனு, ரிஷபம், யானை, தங்ககுதிரை, நந்திகேசர், கைலாசபர்வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வந்தனர்.