சிறுமி பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அம்பலம்..!

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை வழக்கில் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. முத்தையால் பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி மார்ச் 2ம் தேதி வீட்டில் அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீர் என காணாமல் போனார்.

 

இது தொடர்பான புகாரில் முத்தையால் பேட்டை காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில் 5ம் தேதி அதே பகுதியில் வாய்க்காலில் இருந்து சிறுமியை சடலமாக மீட்டனர்.

 

இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த முதியவருடன் இளைஞர் கருணாஸ் ஆகியோரை கைது செய்தனர்.

 

தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்ததையடுத்து ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.