10 ஆடுகள் கடித்து கொலை.. வனத்துறை கூறிய பதிலால் மக்கள் ஆத்திரம்..!

திருப்பத்தூர் அருகே 10 ஆடுகளை கடித்துக் கொன்றது நாய் என வனத்துறையினர் பதிலளித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

வாணியம்பாடி மதுராஞ்சேரி பகுதியில் கடந்த ஒரு மாதமாக வனவிலங்கு நடமாட்டம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சாவித்திரி என்பவர் வீட்டில் இருந்த பத்து ஆடுகளை அடையாளம் தெரியாத விலங்கு கடித்துக் கொன்றது.

 

இதனையடுத்து வனவிலங்கு நடமாட்டம் உள்ளதாக மக்கள் தெரிவித்த நிலையில் தகவலறிந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தில் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு பத்து விலங்குகளை கடித்தது என்று பதில் அளித்தனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வனத்துறையினரின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதாகவும் வனத்துறையினர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினார்.