மீண்டும் ஒரே டிராக்கில் வந்த இரு ரயில்கள்..!
ஒடிசா மாநிலத்தைப் போல சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் ஒரே டிராக்கில் எதிரெதிரே 2 ரயில்கள் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது திடீரென்று எதிர்பாராமல் நடந்தது இல்லை.
பிலாஸ்பூர் ஜெயராம் இடையே ஆட்டோமேட்டிக் சிக்னலின் சிஸ்டம் உள்ளது எனவும் ரயில்வே துறையின் விதிகளின்படி இந்த வசதி உள்ள ரயில் பாதையில் இரு ரயில்கள் எதிர் எதிரில் வரலாம்.
அப்பொழுது தானியங்கி சிக்னல், இயங்கி ரயிலை நிறுத்தி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வீடியோவை தவறாக கருத வேண்டாம் எனவும் ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





