அம்மாபேட்டை ஒன்றிய வணிகர்கள் சங்க கூட்டம்தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டம் ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் செல்வம், வேலாசுந்தரராஜன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.முன்னதாக ஒன்றிய செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது மே மாதம் 5ஆம்தேதி சித்தோடு அருகே நடைபெற உள்ள 40 வது வணிகர் தின உரிமை முழக்கம் மாநாட்டில் நமது வணிகர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் சரவணன், சம்பத்குமார், தைரியமணி முருகன் தங்கதுரை உட்பட ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர் முடிவில் பொருளாளர் ரமேஷ்(எ) கோவிந்தசாமி நன்றி கூறினார்.
மேலும் செய்திகள் :
குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை - டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
த.வெ.க கொடிக்கு தடை கோரிய வழக்கு - வாபஸ் பெற்ற பகுஜன் சமாஜ்
ரிதன்யா வழக்கில் மாமியார் சித்ரா தேவி ஜாமீன் மனு தள்ளுபடி..!
2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஒருநாள் கூத்துக்காக வேஷம் போடும் ஸ்டாலின்: அண்ணாமலை